Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் யாழ் இளைஞர் உயிரிழப்பு; பொலிஸாரின் அலட்சியமே காரணமா? – பெரும் சர்ச்சை

கனடாவில் யாழ் இளைஞர் உயிரிழப்பு; பொலிஸாரின் அலட்சியமே காரணமா? – பெரும் சர்ச்சை

3 months ago
in செய்திகள்

கனடாவின் பிரம்ப்டன் (Brampton) நகரில் வீதியில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கனேடிய பொலிஸார் காட்டிய அலட்சியமே உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் எனப் பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்தவரும், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி மாலை Queen Street மற்றும் Kennedy Road சந்திப்பிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

மயங்கி விழுந்ததைக் கண்ட பேருந்து சாரதி வழங்கிய தகவலின் பேரில் அங்கு வந்த பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police), மயக்க நிலையில் இருந்த கெனடியை விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதிய பொலிஸார், அவருக்கு அபராதச் சீட்டு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறான தகவல் வழங்கப்பட்டதால் முறையான அவசர சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனையில் கெனடியின் உடலில் மதுவின் தாக்கம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகவே (Brain Hemorrhage) அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், நீண்ட நேரத் தாமதத்தின் பின் வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மரணத்திற்கு முன் உடல் உறுப்புத் தானத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த கெனடி, தனது மறைவின் ஊடாக ஆறு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்டத் தகவல் தவறானது என்பதை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியதை அடுத்து, தாம் வழங்கிய அபராதம் தவறானது எனப் பீல் பிராந்திய பொலிஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தற்போது உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூன்று வாரங்களுக்கு முன்பே கனடிய பிரஜாவுரிமை பெற்றிருந்த கெனடி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயார் மற்றும் உறவினர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். தற்போது அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலும், தாயாரைக் கனடாவுக்கு அழைத்து வருவதிலும் ஆவணச் சிக்கல்கள் நிலவி வருவதாக தெரியவருகின்றது.

சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால் ஓர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கும் கனடியத் தமிழ் சமூகத்தினர், இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!
செய்திகள்

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

August 4, 2026
சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!

August 4, 2026
பாறை சரிவால் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு
செய்திகள்

பாறை சரிவால் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு

August 4, 2026
சில பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை; பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

சில பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை; பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

August 4, 2026
தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
Next Post
42 இலட்சம் ரூபாய் பெறுமதியான சீன சிகரெட்டுகள் பறிமுதல்!

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான சீன சிகரெட்டுகள் பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.