Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை? ; சஜித் கேள்வி!

உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை? ; சஜித் கேள்வி!

3 years ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள குழுக்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிலைப்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக மக்கள் ஆணையுடன் பாராளுமன்றத்திற்கு வந்த 134 பேரால் தற்போதைய ஜனாதிபதியை நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறியும் பொறுப்பும் உண்மையை கண்டறியும் பொறுப்பும் தற்போதைய ஜனாதிபதிக்கும் உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நேரத்தில் யாரும் பேதம் பாராது அனைவரும் உண்மையை பேச வேண்டும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட பிணங்கள் மீது நடந்திய அந்த அரசியலை தாம் நிராகரிப்பதாகவும், இந்நேரத்தில் உண்மை நாட்டுக்கு தேவைப்பட்டாலும், அரசாங்கம் இந்த உண்மையை மறைப்பது எந்த தரப்பை பாதுகாக்கவென கேள்வி எழுப்புவதாகவும், அரசாங்கம் தொடர்ந்து உண்மையை மறைத்தால், பயங்கரவாதத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தென்னை உற்பத்தி செய்யும் விவசாயிகள் குழுவுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் இந்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியின் பின்னணியில், அந்தத் தாக்குதலின் பின்னணியில் திட்டமிட்டவர்கள், பிரதானமாக செயற்பட்டவர்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள் தொடர்பில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து உண்மை என்னவென்று கேள்வி எழுப்புவதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு அரசாங்கமாக ஏன் ஆர்வமற்று செயற்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்புகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடக்க ஏற்பாட்டு குழு குறித்து சந்தேகத்திக்கிடமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில் உண்மை என்ன? உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக்கூட்டம் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக்கூட்டம் இன்று ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.