Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை

1 hour ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணக்கோரியும், நெல்லுக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மாவட்ட விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று (23) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தையும் பேரணியையும் முன்னெடுத்தனர்.

​மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தமது வாழ்வாதாரக் கோரிக்கைகளை உரத்த குரலில் வலியுறுத்தினர்.

​இப்போராட்டத்தின் போது விவசாயிகளினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன,

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் விவசாய உள்ளீடுகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், விவசாயிகளின் உற்பத்திச் செலவுக்கு நிகரான நியாயமான விலை நெல்லுக்கு வழங்கப்பட வேண்டும்.

இடைத்தரகர்களின் சுரண்டல்களைத் தடுத்து, சாதாரண விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் (PMB) ஊடாக அரசாங்கமே நேரடியாக நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.

விவசாயத்திற்கு இன்றியமையாத உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட ஏனைய இரசாயனங்கள் மற்றும் உள்ளீடுகள் விவசாயிகளுக்கு நியாயமான, சலுகை விலையில் தடையின்றிக் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட வேண்டும்.

உள்நாட்டு நெல் உற்பத்தியையும், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மிக மோசமாகப் பாதிக்கும் அரிசி இறக்குமதியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

​காந்தி பூங்காவிற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு மட்டக்களப்பு நகரின் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக, சென்ட்ரல் வீதி ஊடாக மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை வந்தடைந்தனர்.

​பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், தமக்கான தீர்வுகள் விரைவாக எட்டப்பட வேண்டும் எனவும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தித் தொடர்ந்து தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
​
போராட்டத்தின் இறுதி நிகழ்வாக, தங்களது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய விசேட மகஜரை, மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு விவசாயிகள் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

​தமது வாழ்வாதாரத்தை நசுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்காவிடின், எதிர்வரும் காலங்களில் ஒட்டுமொத்த விவசாயிகளையும் திரட்டிப் பாரியளவிலான தொடர் போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்க நேரிடும் என இதன்போது விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!
செய்திகள்

ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

June 23, 2026
ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!
செய்திகள்

ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!

June 23, 2026
நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

June 23, 2026
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!
செய்திகள்

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!

June 23, 2026
சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா
காணொளிகள்

சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா

June 23, 2026
ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது
செய்திகள்

ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது

June 23, 2026
Next Post
ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.