Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணக்கோரியும், நெல்லுக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மாவட்ட விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று (23) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தையும் பேரணியையும் முன்னெடுத்தனர்.

​மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தமது வாழ்வாதாரக் கோரிக்கைகளை உரத்த குரலில் வலியுறுத்தினர்.

​இப்போராட்டத்தின் போது விவசாயிகளினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன,

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் விவசாய உள்ளீடுகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால், விவசாயிகளின் உற்பத்திச் செலவுக்கு நிகரான நியாயமான விலை நெல்லுக்கு வழங்கப்பட வேண்டும்.

இடைத்தரகர்களின் சுரண்டல்களைத் தடுத்து, சாதாரண விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் (PMB) ஊடாக அரசாங்கமே நேரடியாக நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.

விவசாயத்திற்கு இன்றியமையாத உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட ஏனைய இரசாயனங்கள் மற்றும் உள்ளீடுகள் விவசாயிகளுக்கு நியாயமான, சலுகை விலையில் தடையின்றிக் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட வேண்டும்.

உள்நாட்டு நெல் உற்பத்தியையும், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மிக மோசமாகப் பாதிக்கும் அரிசி இறக்குமதியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

​காந்தி பூங்காவிற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு மட்டக்களப்பு நகரின் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக, சென்ட்ரல் வீதி ஊடாக மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை வந்தடைந்தனர்.

​பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், தமக்கான தீர்வுகள் விரைவாக எட்டப்பட வேண்டும் எனவும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தித் தொடர்ந்து தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
​
போராட்டத்தின் இறுதி நிகழ்வாக, தங்களது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய விசேட மகஜரை, மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு விவசாயிகள் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

​தமது வாழ்வாதாரத்தை நசுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்காவிடின், எதிர்வரும் காலங்களில் ஒட்டுமொத்த விவசாயிகளையும் திரட்டிப் பாரியளவிலான தொடர் போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்க நேரிடும் என இதன்போது விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல்; ரூ.46,000 அபராதம்!

August 7, 2026
மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!

August 7, 2026
நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை; வவுனியா வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

August 7, 2026
அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை
செய்திகள்

அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களுக்கு வரையறை

August 7, 2026
Next Post
ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.