30 நிலக்கரி கப்பல்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தொடர்பிருப்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அறிவியல் பூர்வமான தரவுகள் மற்றும் ஆவணங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னர் தன்னிடம் உள்ள மேலதிக ஆதாரங்களை பொதுமக்கள் மத்தியில் வெளியிடத் தயாராக இருப்பதாகவும் சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அதில் முதலாவது முறைப்பாடு, ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.








