தாதியர் நியமனம் பெற்றுவிட்டு வைத்தியர் வேலை செய்ய முடியுமா? அதேபோன்று சுகாதார தொழிலாளர் என்ற போர்வையில் சபையின் உயர் அதிகாரிகளின் உறவினர்களுக்கும் கட்சி சார்ந்தவர்களுக்கும் நியமனங்கள் வழங்கி குளுகுளு அறையில் வேலைக்கு அமர்த்திய முறைகேடு தொடர்பாக கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்ற பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஈ.பி.டிபி. கட்சியின் வாராந்த ஊடக மாநாடு பாலைமீன்மடுவில் உள்ள காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றது. இதன்போது கட்சியின் இணைப்பாளர் சிவானந்தராஜா, ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,








