இரத்மலானை விமான நிலையத்தில் இயங்கி வரும் விமானப் பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான Cessna 152 வகை பயிற்சி விமானம் ஒன்று இன்று (25) கடினமாக தரையிறங்கியதில் சேதமடைந்துள்ளது.
4R-DRA என்ற பதிவெண்ணைக் கொண்ட குறித்த விமானமே இவ்வாறு சேதமடைந்துள்ளது. விமானத்தை இயக்கிய விமானி சம்பவத்தில் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளார்
சம்பவம் காரணமாக இரத்மலானை விமான நிலையத்தின் வழக்கமான நடவடிக்கைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த விமானத்தை அப்புறப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட விமான நிலையப் பகுதியை சீரமைக்கும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








