கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் தண்ணீர் என நினைத்து ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ இரசாயனத்தை குடித்த 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
வவுனியா செட்டிகுளத்தைச் சேர்ந்த சிறுமி, உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் (23) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாகம் ஏற்பட்ட நிலையில், ஜன்னல் அருகில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து சிறுமி குடித்ததாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.







