Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் மயமாக்கப்படவிருக்கும் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

தனியார் மயமாக்கப்படவிருக்கும் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

2 years ago
in செய்திகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயமாக்கினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புகளை இழப்பார்கள் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்க தலைவர் ஜகத் விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளின் தொழில்சங்க தலைவர்களுடன் நேற்று நடந்த பேச்சின் பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான டொலரை சுயமாக திரட்டிக் கொள்கிறது. கூட்டுத்தாபனம் கடந்த ஜனவரி மாதம் 1300 கோடி ரூபாய், பெப்ரவரி மாதம் 900 கோடி ரூபாய் இலாபமடைந்துள்ளது. இவ்வாறு இலாபமடையும் நிறுவனத்தையே அரசாங்கம் தனியார் மயப்படுத்த தீர்மானித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புகளை இழக்க நேரிடும். இதனால் நாட்டில் பெரும் பிரச்னைகள் தோற்றம் பெறும்.

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக்கொண்டு அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும்போது பலர் தொழில் வாய்ப்புகளை இழப்பார்கள். இதற்கான மாற்று நடவடிக்கைகள் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் பதிலளிக்கையில்,அம்பாந்தோட்டை துறை முகத்தை அண்மித்த பகுதியை
சீனாவின் சினொபெக் நிறுவனத்துக்கும், திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதியை இந்தியாவுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கீரியும் பாம்பும் போல் பகைத்துக்கொள்ளும் சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்குள் முரண்பட்டுக்
கொண்டால் தேவையில்லாத பிரச்னையை நாடு எதிர்கொள்ள நேரிடும்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் செயல்பாட்டுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சகல தொழில்சங்கங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் 21 ஆயிரத்தைக் கடந்தத டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 21 ஆயிரத்தைக் கடந்தத டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

May 22, 2025
ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது
உலக செய்திகள்

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

May 22, 2025
பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகம் செய்தவர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகம் செய்தவர் கைது

May 22, 2025
தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுவதாக NPP எம்.பிஇளங்குமரன் குற்றச்சாட்டு
அரசியல்

தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுவதாக NPP எம்.பிஇளங்குமரன் குற்றச்சாட்டு

May 22, 2025
பிள்ளையானின் மனு மீதான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்
செய்திகள்

பிள்ளையானின் மனு மீதான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்

May 22, 2025
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருக்கு 25 இலட்சம் தருவதாக பேரம் பேசும் ஆளும் கட்சி; ரிஷாட் பதியுதீன்
காணொளிகள்

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருக்கு 25 இலட்சம் தருவதாக பேரம் பேசும் ஆளும் கட்சி; ரிஷாட் பதியுதீன்

May 22, 2025
Next Post
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; இளைஞனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; இளைஞனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.