Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கெளரவிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள்!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கெளரவிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் முகமாக சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் கடந்த 06 ஆம் திகதி கெளரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வில், 5 வருடங்களுக்குமேல் சேவையாற்றிய மண்முனை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இதன் போது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

30 வருட சேவையைப் பூர்த்திசெய்து 60 வயதைக் கடந்து ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுக் கேடயமும் வழங்கப்பட்டதுடன் முன் பள்ளி ஆசிரியர்களினால் நடனம் மற்றும் வில்லுப்பாடல் என்பன இசைக்கப்பட்டது.

சிரேஸ்ட முன்பள்ளி ஆசிரியர் இந்திராணி புஸ்பராஜா கருத்து தெரிவிக்கையில் குழந்தைகளுக்கு சிறந்த நற்பண்புகள் மற்றும் வாழ்வை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன் ஆசிரியர்கள் சிறார்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும் என்றார்.

இந் நிகழ்வின் போது மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான சியாஹூல் ஹக், திருமதி.தட்சண்யா பிரசந்தன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பிறனவசோதி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கணேசமுர்த்தி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பரமலிங்கம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.முரளிதரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.மேகராஜா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அதேசமயம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உதவி கல்வி பணிப்பாளர் புவிராஜசிங்கம் ஓய்வு பெற்று செல்வதனால் முன்பள்ளி ஆசிரியர்களினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தொடர்புடையசெய்திகள்

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு
செய்திகள்

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

June 6, 2025
கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு
உலக செய்திகள்

கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு

June 6, 2025
மோட்டார் திணைக்களத்தின் மீதான இலஞ்ச வழக்கின் சி.சி.ரி.வி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவிப்பு
செய்திகள்

மோட்டார் திணைக்களத்தின் மீதான இலஞ்ச வழக்கின் சி.சி.ரி.வி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவிப்பு

June 6, 2025
பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா

June 6, 2025
அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்
உலக செய்திகள்

அதிகரித்து வரும் எலான் மஸ்க் – ட்ரம்ப்ற்கு இடையிலான கருத்து மோதல்

June 6, 2025
சுகாதார எச்சரிகைப் படக்காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் விற்றவருக்கு தண்டம்
செய்திகள்

சுகாதார எச்சரிகைப் படக்காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் விற்றவருக்கு தண்டம்

June 6, 2025
Next Post
சர்வதேச விசாரணையை புறம் தள்ளிய ரணிலின் தீர்மானம் பாராட்டுக்குரியது; கோட்டாபய புகழாரம்!

சர்வதேச விசாரணையை புறம் தள்ளிய ரணிலின் தீர்மானம் பாராட்டுக்குரியது; கோட்டாபய புகழாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.