மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் நடந்த இலஞ்ச வழக்கு தொடர்பான முக்கிய விசாரணையுடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று (05) பாராளுமன்றத்தில் தேசிய போக்குவரத்து ஆணைய (திருத்த) சட்டமூலத்தில் இரண்டாவது வாசிப்பின் போது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அண்மையில் 4 மில்லியன் ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பல சந்தேக நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்தது.

அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் முக்கிய அதிகாரிகள் அடங்குவதுடன் அவர்களில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரும் அடங்குவார்.
அதனடிப்படையில், கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அதிகாலை 2 மணி முதல் சி.சி.ரி.வி பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இலஞ்சம் கேட்டவர்கள் கைது செய்யப்பட்டபோது, மதிப்பாய்வு செய்யப்பட வேண்டிய சி.சி.ரி.வி காட்சிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊழல் அதிகாரிகள் இப்போது கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டார்கள் என்று உறுதியளித்தனர்.