Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலுடன் இணைந்து செயற்பட்டவர் சஹ்ரான்; ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு!

இஸ்ரேலுடன் இணைந்து செயற்பட்டவர் சஹ்ரான்; ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

சஹ்ரான் இஸ்ரேலின் புலனாய்வு துறையுடன் இணைந்து செயற்பட்டவர் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(20) நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்துரைக்கையில்,

“தாக்குதல் இடம்பெற்ற சில தினங்களுக்கு பின்னர் பேராயார் கர்தினாலை நாங்கள் சந்தித்தபோதும் இஸ்ரேலின் கூலிப்படையினரே இதற்கு பின்னணியில் இருக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அதனால் கிறிஸ்தவர்களை கொலை செய்ய முஸ்லிகளுக்கு என்ன தேவை இரு்க்கிறது. இஸ்ரேல் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரிசலை ஏற்படுத்தவே இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் பலஸ்தீனில் வைத்தியசாலை மீது மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் மூலம் யுத்தக்குற்றத்தை மேற்கொண்டுள்ளது. பலஸ்தீனில் 2,2 மில்லியன் மக்கள் மிகவும் மோசமான முறையில் தாக்கப்படுகின்றனர்.

பெண்கள், முதியோர், சிறுவர் என கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலஸ்தீன் மீது தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தைமீறி செயற்பட்டு வருவதை உலக நாடுகள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. அத்துடன் இஸ்ரேலின் இந்த தாக்குதலை இன அழிப்பாகவே நாங்கள் பார்க்கிறோம்.

காஸா பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தவே முயற்சிக்கின்றனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலை கண்டித்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

யுத்தத்தை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு அந்த அரசாங்கங்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சில நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டுளளது.

மேலும் இந்த மோதல் காரணமாக பாரிய தாக்கத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. எரிபொருள் பிரச்சினை, பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் இந்த மோதலை நிறுத்துவதற்கு உலக நாடுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஹமாஸ் குழுவின் தாக்குதல் இஸ்ரேலின் புலனாய்வு துறையில் பாரிய குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளன.

அதேநிலையில் ஹமாஸின் தாக்குதலால் பலஸ்தீன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்த மோசமான கூற்றே ஹமாஸ் தாக்குதல் நடத்த காரணமாகும்.” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை
செய்திகள்

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை

June 8, 2025
செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!

June 8, 2025
இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்

June 8, 2025
Next Post
வைத்தியசாலையை விட்டு வெளியேறிய டயானா கமகே! (காணொளி)

வைத்தியசாலையை விட்டு வெளியேறிய டயானா கமகே! (காணொளி)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.