Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியனிடம் பணம் பெற்றுக்கொண்டு பொய்ச்செய்தி பரப்புகிறார் ஊடகவியலாளர்;பகிரங்கமாக பேசிய பிள்ளையான்!

சாணக்கியனிடம் பணம் பெற்றுக்கொண்டு பொய்ச்செய்தி பரப்புகிறார் ஊடகவியலாளர்;பகிரங்கமாக பேசிய பிள்ளையான்!

2 years ago
in மட்டு செய்திகள்

பிரதேச மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்களை இராஜாங்க அமைச்சர் பிள்ளையான அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி உடகவியலாளர்கள் பணத்தினைப்பெற்றுக்கொண்டு, மக்களுக்கு பொய்யான தகவல்களை வழங்குவதாகவும், சிறிய விடயங்களையும் ஊடகங்கள் மூலம் பெரிதாக காண்பிப்பதாகவும் தெரிவித்து ஊடகவியலாளர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட ஒரு ஊடகவியலாளரை சுட்டிக்காட்டி, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் பணம் வாங்கியே தவறான செய்திகளை ஊடகங்களுக்கு பரப்பிவருவதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் போது குறுக்கிட்ட சாணக்கியன், ஊடகவியலாளர்களுக்கு பணம்கொடுத்து பொய்யான செய்திகளைபரப்புவதாகத் தெரிவித்தமையை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக சென்ற பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி, குறிப்பாக இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் நிற்க வைத்து பிரதான கதவை பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து சர்வாதிகாரப் போக்குடன் அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து முறைப்பாடு வழங்க வந்த மக்களை வெளியிலேயே நிற்க வைத்து விட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்குள் சென்று இது தொடர்பில் பிள்ளையானுடன் வாக்குவதாம் இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்தே செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை நோக்கி பிள்ளையான் அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்
செய்திகள்

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

May 15, 2025
ஓட்டமாவடி வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
செய்திகள்

ஓட்டமாவடி வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

May 15, 2025
மட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் மீது இனம் தெரியாதோர் வழி மறித்து தாக்குதல்
காணொளிகள்

மட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் மீது இனம் தெரியாதோர் வழி மறித்து தாக்குதல்

May 14, 2025
பொதுமக்கள்- ரெட் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள்
செய்திகள்

பொதுமக்கள்- ரெட் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள்

May 14, 2025
மட்டு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்
செய்திகள்

மட்டு குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்

May 14, 2025
Next Post
ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே;படையெடுக்கும் மக்களுடன் தமிழ் எம்பிக்கள்!

ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே;படையெடுக்கும் மக்களுடன் தமிழ் எம்பிக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.