Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களை நான் எச்சரிக்கவில்லை- சாணக்கியன் தான் இனவாதத்தை தூண்ட முயற்சி செய்கிறார்-; அம்பிட்டிய சுமனரத்ன தேரர்!

தமிழ் மக்களை நான் எச்சரிக்கவில்லை- சாணக்கியன் தான் இனவாதத்தை தூண்ட முயற்சி செய்கிறார்-; அம்பிட்டிய சுமனரத்ன தேரர்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட தொடர்ந்தும் முயற்சிப்பதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்குள்ளும் அதன் வெளியிலும் பேசாது அமைதி காப்பதாக நேற்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.

அத்து்டன், தமிழர்களுக்கு எதிராக தாம் வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது தாயின் சமாதி உடைக்கப்பட்டதை அறிந்து சில வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை தாம் மனதார கூறவில்லை என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஜயந்திபுர மற்றும் விஜயபுரவில் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்தை கனரக இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தியமை தொடர்பில் கடந்த 21 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் தாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் அக்கறை கொள்ளவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொலிஸாரின் அலட்சியம் காரணமாக தாம் குறித்த மயானம் உள்ள இடத்துக்கு சென்றிருந்ததாகவும், இதன் போது மயானத்தில் இருந்த தனது தாயின் சமாதியை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஆக்ரோஷமடைந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் போது, கடமை தவறிய பொலிஸாரை தாம் தூற்றியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மேலும், கிழக்கில் வாழும் கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் இந்து மக்களுக்கான மயானங்கள் அழிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தாம் தமிழ் மக்களுக்கு எச்சரித்ததாக பலர் கூறுவதாகவும், தாம் அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிங்கள மக்களின் மயானங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் யாரும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இனவாத சக்திகளுக்கு முஸ்லிம் ஊடக பிரதிநிதிகள் துணை என்ற குற்றச்சாட்டுக்கு வலுக்கும் கண்டனம்
செய்திகள்

இனவாத சக்திகளுக்கு முஸ்லிம் ஊடக பிரதிநிதிகள் துணை என்ற குற்றச்சாட்டுக்கு வலுக்கும் கண்டனம்

June 19, 2026
அமெரிக்கா–ஈரான் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில்
உலக செய்திகள்

அமெரிக்கா–ஈரான் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில்

June 19, 2026
வெறுப்புணர்வால் கனடா பேருந்தில் இஸ்லாமியப் பெண்ணைத் தாக்கியவர் கைது
உலக செய்திகள்

வெறுப்புணர்வால் கனடா பேருந்தில் இஸ்லாமியப் பெண்ணைத் தாக்கியவர் கைது

June 19, 2026
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு; யாழிலிருந்து கொழும்பு வரை இந்திய மாற்றுத்திறனாளியின் சைக்கிள் பயணம்!
செய்திகள்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு; யாழிலிருந்து கொழும்பு வரை இந்திய மாற்றுத்திறனாளியின் சைக்கிள் பயணம்!

June 19, 2026
கதிர்காம பாத யாத்திரையில் திருட்டு; யாத்திரிகர்கள் தொடர்பில் முன்வைத்துள்ள வேண்டுகோள்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரையில் திருட்டு; யாத்திரிகர்கள் தொடர்பில் முன்வைத்துள்ள வேண்டுகோள்

June 19, 2026
25 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்ட பாலையடிவட்டை சந்தை வளாகம்; பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம்!
செய்திகள்

25 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்ட பாலையடிவட்டை சந்தை வளாகம்; பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

June 19, 2026
Next Post
சீன பிரஜையிடம் சிகரெட் பெட்டி திருடிய பொலிஸாருக்கு சிறை!

சீன பிரஜையிடம் சிகரெட் பெட்டி திருடிய பொலிஸாருக்கு சிறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.