Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடலில் ஆய்வு செய்ய கேட்கும் மற்றுமொரு சீனக்கப்பல்!

இலங்கை கடலில் ஆய்வு செய்ய கேட்கும் மற்றுமொரு சீனக்கப்பல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு முதல் பகுதியில் குறித்த கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும் குறித்த கப்பலுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த சீன ஆய்வு கப்பல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், இதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை எனவும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள சீன தூதரகம் எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவினால் தொடர்ந்தும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், சீனா மீண்டும் அனுமதி கோரியுள்ளது. இந்த நிலையில், சீனாவின் கோரிக்கை குறித்து தமக்கு தெரியாது என வெளி விவாகர அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கபில பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த 14 மாதங்களில் இரண்டு ஆய்வு கப்பல்களை சீனா இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதன்படி, கொழும்பு துறை முகத்தில் அண்மையில் நங்கூரமிட்ட ‘ஷி யான் 6’ எனும் சீன ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்பில் இரண்டு நாள் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.

இந்த நடவடிக்கையானது இந்திய பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்த இந்தியாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைப்பது உங்களுடைய வீண் கனவு; சபையில் முட்டிக்கொண்ட தமிழ் தரப்புக்கள்!

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைப்பது உங்களுடைய வீண் கனவு; சபையில் முட்டிக்கொண்ட தமிழ் தரப்புக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.