கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செஹான் திலங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கல்குடா சுற்றுலா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சந்திரபால தலைமையில் கல்குடா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஏ.றஹீமின் (SI) பங்குபற்றுதலோடு இன்று (18) காலை மணி முதல் பாசிக்குடா கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதானப்பணியில் சுகாதாரப்பரிசோதகர் எம்.ஜெளபர், கல்மடு, கல்குடா, கும்புறுமூலை, பேத்தாளை கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர் எனப்பலர் கலந்து கொண்டனர்.


இதன் போது, பாசிக்குடா கடற்கரை வாகனத்தரிப்பிடம், அதனைச்சுற்றியுள்ள வடிகான்கள், அதனை அண்டிய பிரதேசங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், வெற்று போத்தல்கள், பொலிதீன் கழிவுகள், குப்பை கூழங்கள் என்பன அகற்றி சுத்தம் செய்யப்பட்டதுடன், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் ஊழியர்களின் உதவியுடன் கழிவுகளும் அகற்றப்பட்டன.