Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே நாளில் அரசுக்கு எதிராக களமிறங்குகிறது தமிழ் கட்சிகள்; வடகிழக்கில் 8மாவட்டங்களிலும் போராட்டம் !

ஒரே நாளில் அரசுக்கு எதிராக களமிறங்குகிறது தமிழ் கட்சிகள்; வடகிழக்கில் 8மாவட்டங்களிலும் போராட்டம் !

3 years ago
in முக்கிய செய்திகள்

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படு
கொலையை எதிர்த்து பெரும் எதிர்ப்பு போராட்டத்தை வடக்கு – கிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒரேநாளில் முன்னெடுக்கத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகேயுள்ள தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் நேற்று மாலை நடந்த
கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளான ‘புளொட்’ தலைவர் த. சித்தார்த்தன், ‘ரெலோ’ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ‘ஈ. பி. ஆர். எல்.எவ்.” தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன் உள்ளிட்ட 7 தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் – பிரதிநிதிகள் மற்றும் எம். ஏ. சுமந்திரன் எம். பி. ஆகியோரும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர், வேலன் சுவாமிகள் ஆகியோருடன் 22 பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது, தமிழ் மக்களின் தொன்மையையும் தேசியத்தையும் சிதைக்கும் வகையில் கலாசார
பண்பாட்டு மற்றும் சமூக விழுமியங்களை சிதைத்து நமது இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில்
சைவ ஆலயங்களை நிர்மூலமாக்கியும் அங்கு பௌத்த சின்னங்களை நிறுவியும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப்படுகொலையை எதிர்த்து
பெரும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை வடக்கு – கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஒரே நாளில்முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான ஒழுங்குகளை முன்னெடுக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இதேபோன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள இவ்வேளையில்
அதனுடைய கடுமையான எதிர்விளைவுகளை கவனத்தில் கொண்டு அச்சட்ட மூலத்தை எதிர்த்தும் அதை நிறைவேறாமல் தடுப்பதற்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளோடு கலந்துரை யாடல் நடத்தி ஒன்றிணைந்த எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான திகதிகள் விவரங்கள் என்பன ஏற்பாட்டு குழுவினரால் பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கு. சுரேந்திரன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் போராட்டங்கள் நடத்துவது தொடர்பில் அங்குள்ளநாடாளுமன்ற உறுப்பி னர்களுடன் கலந்துரையாடும் பொறுப்பு த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கல நாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

போராட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவில் கு.சுரேந்திரன், பா.கஜதீபன், விதுசன், க. சர்வேஸ்வரன், நிஷாந்தன், வேலன் சுவாமி, கலையமுதன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
வடக்கு-கிழக்கில் எரிபொருள் விற்பனைக்கான உரிமம் ஐ .ஓ.சியின் கையில்!

வடக்கு-கிழக்கில் எரிபொருள் விற்பனைக்கான உரிமம் ஐ .ஓ.சியின் கையில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.