Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராஜபக்ச சகோதர்களே குற்றவாளிகள்; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ராஜபக்ச சகோதர்களே குற்றவாளிகள்; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக குறித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகலா, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் ராஜபக்சக்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட குழுவினால் மக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த போதே ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவில்,கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொழிலதிபர்களுக்கு 681 பில்லியன் ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இதுவே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பிரச்சினை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியின் போது 500 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பொருளாதார தவறான நிர்வாகப் பிரச்சினைகளையுமட மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை மனுதாரர்களுக்கு தலா 150ஆயிரம் ரூபாவை நட்டஈடாக வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தாந்தாமலை முருகன் ஆலய நிர்வாகத்திற்குள் குழப்பம்; செயலாளர் மீது ஆலய பரிபாலனசபை தலைவர் குற்றச்சாட்டு
காணொளிகள்

தாந்தாமலை முருகன் ஆலய நிர்வாகத்திற்குள் குழப்பம்; செயலாளர் மீது ஆலய பரிபாலனசபை தலைவர் குற்றச்சாட்டு

June 16, 2025
மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடுகளை அறுக்கும் கொல்களத்திற்கு சீல் வைப்பு
செய்திகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடுகளை அறுக்கும் கொல்களத்திற்கு சீல் வைப்பு

June 16, 2025
அறையில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
உலக செய்திகள்

அறையில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

June 16, 2025
செயற்திறன் அற்ற அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் முன்வர வேண்டும்; சபாநாயகர் வலியுறுத்தல்
செய்திகள்

செயற்திறன் அற்ற அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் முன்வர வேண்டும்; சபாநாயகர் வலியுறுத்தல்

June 16, 2025
ஈரானின் தாக்குதலில் இன்று காலையும் ஒரு இலங்கையர் காயம்
உலக செய்திகள்

ஈரானின் தாக்குதலில் இன்று காலையும் ஒரு இலங்கையர் காயம்

June 16, 2025
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீ பரவல்
செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீ பரவல்

June 16, 2025
Next Post
பிரான்ஸில் அதிக மதுபான போத்தல்களுடன் இலங்கையர் ஒருவர் கைது!

பிரான்ஸில் அதிக மதுபான போத்தல்களுடன் இலங்கையர் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.