வரவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த உயர்தர) பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவையாக தோற்றவுள்ள ஐந்து மாணவர்களால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்மூலம், குறித்த மனுவை விசாரிக்க தேவையில்லை எனத் தீர்மானித்த உயர் நீதிமன்றம், அதனை விசாரணையின்றியே நிராகரித்துள்ளது.








