Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரட்டை வாய்க்கால் பகுதியிலும் பொலிஸாரின் அடாவடி!

இரட்டை வாய்க்கால் பகுதியிலும் பொலிஸாரின் அடாவடி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரட்டைவாய்க்கால் அதாவது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலப்பகுதியில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக மக்கள் முன்வந்த போது காவல்துறையினரால் இடையூறு விளைவிக்கப்பட்டது.

குறிப்பாக நேற்றைய தினம் துயிலும் இல்ல ஏற்பாடுகளை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர் ஒருவர் வீட்டில் ஆட்கள் இல்லாத வேளை காவல்துறையினர் அங்குள்ள சிவப்பு மஞ்சள் கொடிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

அத்தோடு, துயிலும் இல்லத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காட்சிப்படுத்தியிருந்த மாவீரர் நாள் தொடர்பான பதாகையை அகற்ற வேண்டுமென காவல்துறையினர் முரண்பட்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, சமூக செயற்பாட்டாளர் வீரசிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனையும் காவல்நிலையத்திற்கு வருகை தருமாறு அழைத்து நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்படுவதாக கூறி பல கேள்விகளை கேட்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அதன்போது, இருவரிடம் சுமார் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு மேல் வாக்குமூலம் பதிவு செய்து பின்னர் சமூக செயற்பாட்டாளர் வீரசிங்கத்திடம் எடுத்துச் செல்லப்பட்ட கொடிகளையும் மீள வழங்கியுள்ளார்கள்.

தற்போது இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்திலே ஏற்பாட்டு பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

அத்தோடு, நாளைய நாள் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெறும் எனவும் குறித்த இடத்தில் அனைத்து மக்களையும் அச்சமின்றி அஞ்சலி செலுத்த வருமாறு பணிக் குழுவை சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
உலக செய்திகள்

இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

June 13, 2025
படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
அரசியல்

படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

June 13, 2025
விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி
செய்திகள்

விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி

June 13, 2025
“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்
அரசியல்

“என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம்”; தவெக தலைவர் விஜய்

June 13, 2025
இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை
செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை

June 13, 2025
முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

June 13, 2025
Next Post
இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கு இல்லையா? ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி!

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கு இல்லையா? ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.