தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து, இந்தியாவின் தலைநகர் புது டில்லிக்குச் சென்ற ஏயார் இந்தியா விமானத்திற்கு இன்று (13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, AI 379 விமானத்தில் இருந்த 156 பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று (13) காலை 9.30 மணிக்கு இந்திய தலைநகருக்குச் செல்லும் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டது, ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி ஒரு பரந்த சுழற்சியை மேற்கொண்டு தெற்கு தாய்லாந்தில் மீண்டும் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.