Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட நால்வருக்கு பிணையில் செல்ல அனுமதி; மட்டு நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட நால்வருக்கு பிணையில் செல்ல அனுமதி; மட்டு நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட 4 பேருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு பயணம் செய்திருந்தார்.

இதன் போது, ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்புக்கான பயணத்தை எதிர்த்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட நால்வருக்கும் பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரு சரீரப் பிணையில் செல்ல நீதவான் குறித்த தரப்பினருக்கு அனுமதியளித்ததுடன், காவல் நிலையத்துக்கு சென்று வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத மேலும் இருவருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்படுமென நீதவான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாட முயன்ற பெண் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாட முயன்ற பெண் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.