Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹபரனை காட்டிற்குள் வைத்து பயணிகளை இறக்கி விட்ட பேருந்து நடத்துனர்; வாழைச்சேனை பஸ் டிப்போவின் அசமந்த போக்கு!

ஹபரனை காட்டிற்குள் வைத்து பயணிகளை இறக்கி விட்ட பேருந்து நடத்துனர்; வாழைச்சேனை பஸ் டிப்போவின் அசமந்த போக்கு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிகளை ஏற்றி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹபரனை காட்டிற்குள் வைத்து பயணிகளை இறக்கி விட்ட சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, வாழைச்சேனை தரிப்பிட பேருந்து ஒன்று நேற்றைய தினம் 01 இரவு 9 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிகளை ஏற்றி வந்துள்ளது.

இவ்வாறு வந்த பேருந்து ஹபரனை காட்டிற்குள் வைத்து தானாக நிறுத்தப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது என்று பயணிகள் நடத்துனரை வினவிய போது, பேருந்தில் டீசல் தீர்ந்து விட்டதாகவும்,ஒன்லைனில் நீங்கள் பயணசீட்டை வாங்கியதால் எங்களிடம் டீசல் அடிப்பதற்கு பணமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் உடனடியாக வாழைச்சேனை பஸ் டிப்போவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடொன்றை பதிவிட்டுள்ளதுடன்,பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பிற பேருந்துகளில் மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
ஹபரனை காடு எவ்வாறான காடு என்று எம் எல்லோருக்கும் தெரியும். யானை ஏதும் வந்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் இடம் பெற்றால் இதற்கு யார் பொறுப்பு கூறுவார்கள்,உண்மையில் நாங்கள் இதை நடத்துனர்கள் மற்றும் பேருந்து நிலைய உயர் அதிகாரிகளின் அசமந்தப்போக்காகவே பார்க்கின்றோம் என்று விசனம் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் இது தொடர்பில் இன்று 02 எமது battinaatham ஊடகம் வாழைச்சேனை பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி, இது தொடரில் கேட்டறிந்த போது எமது தரிப்பிடத்திற்கு இது தொடர்பில் எந்த முறைப்பாடுகளும் வரவில்லை எனவும், இது தொடர்பில் நாங்கள் நடத்துனரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
தடுப்புக்காவல் மரணங்கள் பொலிஸ் நிலையங்களில் அதிகரிப்பு!

தடுப்புக்காவல் மரணங்கள் பொலிஸ் நிலையங்களில் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.