Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை அரசின் செயற்பாடு வாக்குறுதிகளுக்கு மாறானது; ஐ.நா தெரிவிப்பு!

இலங்கை அரசின் செயற்பாடு வாக்குறுதிகளுக்கு மாறானது; ஐ.நா தெரிவிப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கையின் வடக்கு-கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

இது மனித உரிமைகளை மீறும் சட்டத்தினை பயன்படுத்துவதை நிறுத்திவைப்பது குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு மாறானது எனவும் அது தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடவேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை,இலங்கையில் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காகத் தொடர்ந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச தர நிலைகள் மற்றும் மனித உரிமைகள் மரபுகளுக்கு ஏற்ப சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், இதற் கிடையில் உறுதிமொழிகளின்படி பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாவீரர் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டு வரும் பின்புலத்திலேயே
ஐரோப்பிய ஒன்றியம் தமது கவலையை வெளியிட்டுள்ளது.மட்டக்களப்பு, வெல்லாவெளியில் முன்னெடுக்கப்படவிருந்த மாவீரர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகப் போராளிகள்
கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேபோன்று புலிகளின் ஆடையை அணிந்திருந்ததாக கூறி யாழில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அத்துடன், மாவீரர் நிகழ்வில் கலந்து கொண்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கைதுகளுக்கு சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் வலுபெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது

தொடர்புடையசெய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
Next Post
வட்டி வீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது இலங்கை மத்திய வங்கி!

நிதி நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.