Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
என்ன செய்து என்ன பலன்(கட்டுரை )

என்ன செய்து என்ன பலன்(கட்டுரை )

3 years ago
in அரசியல்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் போராட்டமென்பது கிட்டத்தட்ட தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிரான போராட்டமாக மாறியிருக்கின்றது. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தொடங்கியது-பின்னர் குருந்தூர்மலையில் தரித்துநின்று, இப்போது வெடுக்குநாறிமலையை நோக்கிச் சென்றிருக்கின்றது. நிச்சயம் இதற்கு பின்னர் பிறிதொரு விடயம் நிகழும்.

குறித்த விடயம் நிகழும்போது, மீண்டும், தமிழ்த் தேசியக் கட்சிகள் அந்த இடத்தில் ஒன்று கூடி அடுத்த கட்டப் போராட்டம் தொடர்பில் ஆராய்வர். இந்த பிரச்னைகள் அனைத்திற்குமான அடிப்படையான பிரச்னை, தமிழ்
மக்களுக்கான அரசியல் தீர்வாகும். ஆகக் குறைந்தது மாகாண சபை முறைமையாவது, இயங்கு நிலையில் இருக்கவேண்டும். அதுவும் தற்போதில்லை.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலாவது கட்சிகள் பேசுகின்றனவா என்றால் அதுவும் இல்லை.13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயம் தொடர்பில் ஆறு
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 13ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாக கூறி, யாழ்ப்பாணத்தில் ஊர்தி வலம்
வந்திருந்தனர்.

இதற்கு ஒரு சில புலம்பெயர் அமைப்புக்களும் உறுதுணையாக இருந்தன. ஓரிரு நாட்களுக்கான, 13-எதிர்ப்பு ஊர்தி வலத்துடன் முன்னணியின் அரசியல் தீர்விற்கான போராட்டம் முடிந்துவிட்டது. அதன் பின்னர் ரணில்
விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வின் அவசியம் தொடர்பில் பேசினார் – 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவாக கூறினார். வழமைபோல் முன்னணி 13ஆவது தீர்வில்லையென்று கூறிவிட்டு ஒதுங்கிவிட்டது.

13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுமா அல்லது இல்லையா என்பதில் சந்தேகங்கள் உண்டு. ஆனால் அதனை முழுமையாக அமுல்படுத்துவது அவசியமென்னும் கருத்தை பெரும்பான்மையான தமிழர் தரப்புக்கள் ஆதரிக்கின்றன. அது அமுல்படுத்தப்படுமாக இருந்தால், அதனை ஒரு ஆரம்பப் புள்ளியாகக் கொள்ள முடியும். அதனை ஒரு ஆரம்பப் புள்ளியாக நோக்கமுடியாதென்று வாதிடுவோருமுண்டு. அவர்களது கருத்தே சரியானதென்றால், தாங்கள் கூறும் சரியானதிற்காக அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர். 13 இற்கு அப்பால் செல்வதற் கான எத்தகைய போராட்டங்களை இதுவரையில் முன்னெடுத்திருக் கின்றனர்? இன்றைய சூழலில், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், 13ஆவது தொடர்பில் பேசுவதே ஒரு வகையில் ஆறுதலானதுதான். ஏனெனில் அவ்வாறு பேசுகின்றபோது, கூடவே தமிழ் மக்களுக்கென்று பிரத்தியேகமான அரசியல் பிரச்னையொன்று இருப்பது நினைவூட்டப்படுகின்றது. அந்த வகையிலும் 13 ஒரு ஆறுதலான விடயம்தான். ஆனால் ஒற்றையாட்சி முறைமைக்குள் இருக்கின்ற 13ஆவது திருத்தச்சட்டம் ஒரு தீர்வல்ல, அதனை ஒரு ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறுவோர், தாங்கள் கூறுவதை அடைவதற்காக, கடந்த 13 வருடங்களில் எவ்வாறான அர்ப்பணிப்புக்களை காண்பித்திருக்கின்றனர்? அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டதற்கு அப்பால் – பாராளுமன்றத்தில் பேசியதற்கு அப்பால்?கூட்டமைப்பு சமஷ்டியை வலியுறுத்தியதை எதிர்ப்பதற்கு – ‘ஒரு நாடு இரண்டு தேசங்கள்’ – என்று பிறிதொரு சுலோகத்தை காங்கிரஸ் உயர்த்தியது.

சமஷ்டியை கூட்டமைப்பால் அடைய முடியாது – ஆனால் மக்கள் எங்களை தெரிவு செய்தால் – நாங்கள் ஒரு நாடு இரண்டு தேசத் தீர்வை பெற்றுத் தருவோமென்பதுதான் காங்கிரஸின் வாதம். ஆனால் கடந்த 13 வருடங்களில் இவர்கள் முன்வைத்த சுலோகங்கள் ஆகக் குறைந்தது, அவர்களது கட்சியிலுள்ளவர்களுக்காவது விளங்கியதாக தெரியவில்லை.

கூட்டமைப்பால் சமஷ்டிக்காக போராட முடியவில்லை – அவர்கள் போராடப் போவதுமில்லை – அவ்வாறாயின் ஏனையவர்கள் தாங்கள் கூறும் விடயங்களை அடைவதற்காக போராட வேண்டுமல்லவா? ஒட்டுமொத்தமாக நோக்கினால், தாங்கள் கூறும் எதுவும் சரிவரப் போவதில்லையென்பதில் – அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுமே தெளிவாகவே இருக்கின்றனர். இந்த இடத்தில்தான்யதார்த்த ரீதியாக விடயங்களை முன் வைப்பவர்களின் வாதம் பலமடைகின்றது.

தொடர்புடையசெய்திகள்

எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி
அரசியல்

எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி

June 5, 2026
தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்
அரசியல்

தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை
அரசியல்

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

June 3, 2026
பணக்கார நாடும் அழகான வாழ்க்கையும் வேண்டுமென்றால் இன்னும் 20 வருடங்களுக்கு எங்களுடன் பொறுமையாக இருங்கள்; NPP எம்பி
அரசியல்

பணக்கார நாடும் அழகான வாழ்க்கையும் வேண்டுமென்றால் இன்னும் 20 வருடங்களுக்கு எங்களுடன் பொறுமையாக இருங்கள்; NPP எம்பி

June 1, 2026
பசிலுக்கு உடல் வருத்தம்-அதனால் இப்போதைக்கு நாட்டிற்கு வரமாட்டார்; லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விளக்கம்
அரசியல்

பசிலுக்கு உடல் வருத்தம்-அதனால் இப்போதைக்கு நாட்டிற்கு வரமாட்டார்; லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விளக்கம்

June 1, 2026
Next Post
10 ரூபாவால் குறைக்கப்படும் இன்னுமொரு உணவு!

10 ரூபாவால் குறைக்கப்படும் இன்னுமொரு உணவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.