Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலம்பெயர் அமைப்புகள் நரேந்திர மோடிக்கு கடிதம்!

புலம்பெயர் அமைப்புகள் நரேந்திர மோடிக்கு கடிதம்!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன. ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ளன.அந்தக் கடிதத்தில், “இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் இந்து கலாசாரம் – பாரம்பரியம் – கோவில் ஆகிய வற்றின் இறுதிக் கோட்டையை இலக்குவைக்கிறது.

1948ஆம் ஆண்டின் பின்னர் 1,800 ஆலயங்களையும் பாரம்பரியங்களையும் அழித்த பின்னர் இது இடம்பெறுகின்றது. இலங்கையின் வட பகுதியில் அதிகளவு மதிப்புக்குரியதாகக் காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டுகால வரலாற்றை கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்த கரிசனையுடனும் அவசரத்துடனும் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவம் அந்தப்பகுதியைமிக நீண்டகாலம் தனது கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருந்த பின்னர், பொது மக்களை அங்கு செல்ல அனுமதித்த வேளையே இது தெரியவந்தது. கோவிலையும், துறவிகளின் சமாதியையும் அழித்துவிட்டு அது இருந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகையை கட்டியுள்ளனர்.இதன் மூலம் இந்துக்கள் இறந்தவர்களுக்கு வழங்கும் இறுதி மரியாதையின் புனிதத்தை சீர்குலைத்துள்ளனர்.

2015இல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதிக்கு அருகில் உள்ள நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு சென்று
பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார்.இலங்கையில் உள்ள இந்து பாரம்பரியம், கலாசாரத்தின் இறுதிச் சின்னமாக காணப்படுபவற்றை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இலங்கை
அரசாங்கம் செயல்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் பிணையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளபோதிலும் இது இடம்பெறுகின்றது.புனித பொருள்களை அவமதிக்கும் இந்த செயல் இடம்பெற்ற சில காலத்துக்குள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் உள்ள இந்துக்களின் புனிதபகுதியான கன்னியா வெந்நீரூற்றை அநுராதபுர நகரத்துடன் தொடர்புடையது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஐயனார் கோவில் அழிக்கப்பட்டுள்ளது. வவுனியா வெடுக்கு நாறிமலையில் உள்ள ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டன – களவாடப்பட்டன.

இலங்கைக்கான சர்வதேச உதவிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை, இலங்கையில் இந்து பாரம் பரியம் – கலாசாரம் ஆகியவற்றை அழிக்கும் தனது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை அரசாங்கம் இந்த உதவியை பயன்படுத்த நிதி வழங்கும் சமூகம் அனுமதிக்கக்கூடாது என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்து மத கலாசாரம் அழிக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கையின் வட,கிழக்கு பகுதிகளில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை அமைக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை நிதி
வழங்கும் சமூகம் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம் – என்றுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
Next Post
விடுதலைப்புலிகளின் உதவியினாலேயே ஹரக்ஹட்டா தப்பித்துச்சென்றுள்ளார்; நீதிமன்றத்தில் கூறிய சி. ஐ. டி. அதிகாரிகள்!

விடுதலைப்புலிகளின் உதவியினாலேயே ஹரக்ஹட்டா தப்பித்துச்சென்றுள்ளார்; நீதிமன்றத்தில் கூறிய சி. ஐ. டி. அதிகாரிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.