Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம் தொடர்பாக மாவட்ட செயலக அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு கடந்த (28) செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. ஜே. முரளீதரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஆ. நவேஸ்வரன் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டனர்.

இச்செயலமர்வில் பொதுச் சேவையில் ஈடுபடும் கனிஷ்ட, சிரேஷ்ட மற்றும் பதவிநிலை வரை சகல மட்டங்களிலுமான அனைத்து அரச சேவை உத்தியோகத்தர்களும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழலுக்கு எதிரான சட்டம் புதிய சட்டம் மற்றும் அது தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என் அறிந்திருக்க வேண்டும் என்பதுடன் மக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளை வழங்கும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது நாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் ஊழலற்ற நாடுகள் பட்டியலில் உள்ளீர்க்கச் செய்வதற்கான முயற்சியாக பொதுச் சேவையை முன்னேற்றுதல், ஊழலற்ற நேர்மையான அலுவலராக செயற்பட வேண்டியதன் அவசியம், ஊழல் மற்றும் மோசடி என்றால் என்ன?, ஊழலின் வடிவங்கள், அவை தொடர்பான சட்டங்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, போன்ற விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்குப் பிராந்தியத்திற்கான உதவிப் பதிவாளர் நாயகம் கே. திருவருள், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம். பஸீர், மாவட்ட பொறியியலாளர் ரி. சுமன், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரி. ஜெய்தனன், உட்பட மாவட்ட செயலகத்தில் சகல பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான அறிவித்தல்; கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான அறிவித்தல்; கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.