Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெல்லுக்கான விலை நிர்ணயம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்; மட்டு விவசாயிகள் கோரிக்கை!

நெல்லுக்கான விலை நிர்ணயம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்; மட்டு விவசாயிகள் கோரிக்கை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் நெல்லுக்கான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படவில்லையெனவும் நெல்லுக்கான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட விவசாயம் தொடர்பாகவும், பெரும்போக விவசாயத்தின் முன்னேற்றம், மழை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட விவசாய நிலங்களுக்கான காப்புறுதி நஸ்ட ஈடு வழங்கல் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் 2024ம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச்செய்கைக்கான கால அட்டவணையை தயாரிக்கப்பட்டது.
மேலும் கரடியனாறு விவசாய ஆராய்ச்சி மையத்திற்கான விவசாய ஆராய்ச்சி அதிகாரியின் நியமனம் தொடர்பாக விவசாயிகளினால் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பட்டதுடன், நெல்லுக்கான விலை நிர்ணயம் செய்வதனால் தமது நெல்லினை நியாயமான விலையில் விற்பனை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம், பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் குழுத்தலைவர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மத்திய மாகாண நீர்பாசன திணைக்களங்களுக்குரிய குளங்கள் மற்றும் மகாவலி உட்பட பல்வேறு நீர்பாசன திட்டத்தின் உதவியுடன் இம்முறை சுமார் 90ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கையினை முன்னெடுக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் 80ஆயிரம் ஏக்கரே விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் முயற்சியினால் மேலும் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்கைபண்ணும் நிலைமை காணப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிஞ்சியுள்ளதை அறுவடைசெய்துவருகின்றனர்.ஆனால் இதுவரையில் அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அத்துடன் இதுவரையில் நெல்லுக்கான விலைகளும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
எனவே அரசாங்கம் நெல்லுக்கான விலையினை நிர்ணயம் செய்து நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.தனியார் நெல்லை கொள்வனவு செய்யும் நிலையேற்பட்டால் விவசாயிகளிடமிருந்து அடிமட்ட விலைகளே வழங்கப்படும்.எனவே அரசாங்க அதிபர் இதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் தான் ஜனாதிபதியின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
Next Post
டெஸ்ட் கிரிக்கெட்டில் திறமையை மீண்டும் நிலைநிறுத்த சகலதுறைகளிலும் ஆக்ரோஷம் தேவை; ஊடக சந்திப்பில் தனஞ்சய டி சில்வா!

டெஸ்ட் கிரிக்கெட்டில் திறமையை மீண்டும் நிலைநிறுத்த சகலதுறைகளிலும் ஆக்ரோஷம் தேவை; ஊடக சந்திப்பில் தனஞ்சய டி சில்வா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.