Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்திய கும்பல்; மலேசிய காவல்துறை உதவியால் முறியடிப்பு!

இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்திய கும்பல்; மலேசிய காவல்துறை உதவியால் முறியடிப்பு!

2 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையின் சிறுவர்களை ஐரோப்பாவுக்கு கடத்தும் குழு ஒன்றின் முயற்சியை மலேசியப் பொலிஸார் முறியடித்துள்ளனர். மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் கடந்த புதன்கிழமை கோலாலம்பூரில் உள்ளூர் தம்பதியரை கைது செய்ததன் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

‘பஹ்னு இன்டர்நஷனல்ஸ்’ எனப்படும் நிறுவ னம், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மலேசியப் பெற்றோரைப் பயன்படுத்தி இந்த செயற்பாட்டை மேற்கொண்டு வந்துள்ளது.குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டின்படி, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களுக்கு மலேசிய கடவுச்சீட் டுக்களைப் பெற்றுக் கொள்வதைப் போன்று குடியகயல்வு அலுவலகத்துக்கு அவர்களின் பிறப்புச் சான்றிதழ்களுடன் வருமாறு கூறப்பட்டுள்ளது. எனினும் குடிவரவுப் பிரிவில் விண்ணப்பிக்கும் செயல்முறையின் போது, கைரேகைகள் மற்றும் புகைப்படங்களைப் பெறுவதற்
காக, குறித்த மலேசியப் பெற்றோர், தமது பிள்ளைகளின் வயதை ஒத்த இலங்கைச் சிறுவர்களையே அங்கு அழைத்து வந்துள்ளார்கள்.

இதன்போது குறித்த மலேசியக் கணவனும் மனைவியும் இலங்கையின் சிறுவர்களை மலேசியக்
கடவுச்சீட்டு மூலம் ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்லும் வகையில் அங்கு செயற்படுவார்கள்.
சம்பந்தப்பட்ட இலங்கைப் பிள்ளைகளுக்குப் பயன்படுத்துவதற்காக குடிவரவு அலுவலகத்துக்கு தமது பிள்ளையின் ஆவணங்களுடன் வருகை தருவதற்கு மலேசிய பெற்றோருக்கு 500 ரிங்கிட் வரை கொடுக்கப்பட்டதாக மலேசிய தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்
அடிப்படையில், மலேசிய கடவுச்சீட்டு செய்து ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒவ்வொரு இலங்கைச் சிறுவர்களுக்கும் குறித்த மோசடி நிறுவனம், 30,000 யூரோ முதல் 50,000 யூரோ வரை கட்டணமாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் எவ்வளவு காலம் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது மற்றும் எத்தனை சிறுவர்கள் இதில் இதுவரை ஈடுபடுத்தப்பட்டனர் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

இந்தநிலையில் இலங்கை சிறுவன் ஒருவருக்கு மலேசிய கடவுச்சீட்டைப் பெறுவதற்காக ஒரு மலேசிய தம்பதியினர் கோலாலம்பூர் குடிவரவுத் திணைக்களத்திற்குச் சென்றபோது இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இலங்கை சிறுவனுக்கு மலாய் மொழி பேசத் தெரியாத நிலையில், பாதுகாவலரின் தோற்றத்தில் கணிசமான வித்தியாசம் இருந்ததால், சிறுவனை நேர்காணல் செய்யும்போது ஏதோ குளறுபடி இருப்பதைக் கவனித்த கடவுச்சீட்டுப் பிரிவின் குடிவரவு அதிகாரிகள் தம்பதியினரை கைது செய்தனர். 37 மற்றும் 26 வயதுடைய தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!

May 15, 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

May 15, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை
செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் தமிழ் தேசிய பேரவை கோரிக்கை

May 15, 2025
எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர
செய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

May 14, 2025
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி
செய்திகள்

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி

May 14, 2025
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் நாளை ஏலம்
செய்திகள்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் நாளை ஏலம்

May 14, 2025
Next Post
சட்டவிரோதமாக மாடுகளை கடத்தியவர்கள் காத்தான்குடியில் கைது!

சட்டவிரோதமாக மாடுகளை கடத்தியவர்கள் காத்தான்குடியில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.