வட்டவளை பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டத்தில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
நாலபிட்டியிலிருந்து இன்று 3.00 அளவில் நானுஓயா நோக்கி புறப்பட்டு சென்ற சரக்கு புகையிரம் மேல் வட்டவளைக்கும் ரொசல்லவுக்கும் இடையில் சுமார் 4.30 மணியளவில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் புகையிரதம் ஹட்டன் புகையிரத நிலையம் வரையிலும் கொழும்பிலிருந்து வரும் புகையிரதங்கள் நாவலபிட்டி புகையிரத நிலையத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டு பயணிகள் பொது போக்குரவத்து சேவையினூடாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரம் ரொசல்லவிலிருந்து மீண்டும் திரும்பி வந்த பயணிகள் பஸ்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மலையக புகையிரத பாதையில் அண்மைக்காலமாக அடிக்கடி புகையிரதங்கள் தடம்புரள்வதனால் புகையிரத பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.








