Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திலீபனின் சாவும் அரசியல், அன்னை பூபதியின் சாவும் அரசியல்; இப்படி கூறுகிறார் கஜேந்திரகுமார் எம்.பி!

திலீபனின் சாவும் அரசியல், அன்னை பூபதியின் சாவும் அரசியல்; இப்படி கூறுகிறார் கஜேந்திரகுமார் எம்.பி!

2 years ago
in செய்திகள்

அன்னை பூபதி, தியாகி திலீபன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை நாம் கைப்பற்ற வேண்டும். இந்த நினை வேந்தல்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் நினைவேந்த வேண்டும் என்று கூறியிருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர் காணலிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, அன்னை பூபதி அரசியல் காரணத்துக்காகவே உயிர்தியாகம் செய்தார். அவரின் சாவும் அரசியல் – அவரின் தியாகமும் அரசியல். அந்த அரசியலுக்கு நேர்மாறாக இருந்துகொண்டு, அன்னை பூபதியை நினைவு கூர்வதாக சொல்லிக்கொள்ளும் தரப்புகளுடன் நாம் சேர முடியாது.இதைப்போலவே திலீபனின் சாவும் அரசியல். திலீபனின் நினைவிடத்தில் நாம் யாரையும் அஞ்சலிக்க வேண்டாம் என்று தடுக்கவில்லை. அவர் உயிரிழந்த அந்த நேரத்தில் நாம் விளக்கேற்றிய பின்னர் ஏனையோரை அஞ்சலிக்குமாறு நாம் கூறினோம். ஆனால், அன்னை பூபதியின் நினைவு தினத்தில் பொதுக்கட்டமைப்பு என கூறிக்கொண்டு தாங்கள் மட்டும் தான் நினைவுகூரலாம் வேறு எவரும் நினைவு கூரக்கூடாது என்றார்கள். அன்று காலையில் அன்னை பூபதியை நினைவேந்த எந்த நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மாலை 5 மணிக்கே அன்னை பூபதிக்கு நேர்மாறான கொள்கை கொண்டவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பொதுக் கட்டமைப்புகள் என்று சொல்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கு இந்திய அமைதிப் படை காலத்திலும் – இந்தியாவாலும் மேற்கொள்ளப்பட்டவற்றை மூடி மறைப்பதற்காக வந்தவை. அன்னைபூபதி நினைவேந்தலை தடுத்த பொதுக் கட்டமைப்பை சேர்ந்த சீலன் என்பவர் சொல்கிறார் 13ஆம் திருத்தத்தை நீங்கள் மட்டும்தான் எதிர்க்கிறீர்கள் என்று சொன்னார். இதுவரை நாம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிழைக்கவில்லை – சிலநேரம் நாம் முன் வைத்த குற்றச்சாட்டுகளை விளங்கிக் கொள்ள மக்களுக்கு சிறிது நேரம் எடுக்கும். ஆனால், பிழைக்கவில்லை.திலீபன் அண்ணன் இந்திய அமைதிப் படைக்கும் இந்திய அரசுக்கு எதிராகவும் உயிரைத் தியாகம் செய்ய வேண்டி வந்தது. அதேமாதிரியான நிலைமையே அன்னை பூபதிக்கும் நடக்கிறது. ஆகவே, அந்த இரண்டையும் கைப்பற்றவேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவையும் கைப்பற்ற வேண்டும். ஏன்? 13ஆம் திருத்தத்தை நிராகரித்ததால்தான் போராட்டம் தொடர்ந்து நடந்தது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒற்றையாட்சியையும் 13ஆம் திருத்தத்தையும் நிராகரிக்கின்ற ஒரு நிகழ்வாக அடையாளப்படுத்தக்கூடாது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் இந்த நினை வேந்தல்களை நினைவுகூர வேண்டும். தமிழர்களின் சரித்திரத்தை சிங்களவர்கள் மாத்திரம் மாற்றியமைக்கவில்லை. இந்தியாவுக்கு முகவர்களாக இயங்குவோரும், இலங்கை அரசின் முகவர்களும் மாற்றியமைகின்றனர் – என்றும் அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 18, 2025
மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்
காணொளிகள்

மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்

May 18, 2025
யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு
செய்திகள்

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு

May 18, 2025
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
செய்திகள்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

May 17, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
Next Post
இலங்கையர்களை மத அடிப்படையில் பிரித்து பார்க்கிறதா பா.ஜ.க? – ( கட்டுரை)

இலங்கையர்களை மத அடிப்படையில் பிரித்து பார்க்கிறதா பா.ஜ.க? - ( கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.