Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆறாம் தர மாணவிகளை குழு வன்புணர்வு செய்த ஆசிரியர் தலைமறைவு!

ஆறாம் தர மாணவிகளை குழு வன்புணர்வு செய்த ஆசிரியர் தலைமறைவு!

2 years ago
in செய்திகள்

குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தரம் பயிலும் மாணவிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாட்டை அடுத்து குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்கவின் கோரிக்கைக்கு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் குருநாகல் மாவட்ட அலுவலகம் இந்த விசாரணைகளை மேற்கொண்டது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என குருநாகல் மாவட்ட செயலாளரிடம் பெற்றோர்கள் குழு முறைப்பாடு செய்திருந்தது.

அதன்படி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் குருநாகல் மாவட்ட உளவியல் உத்தியோகத்தர் காஞ்சனா சுபசிங்க, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான சமிர ராமநாயக்க மற்றும் லக்மினி தர்மதாச ஆகியோர் இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுபவர்கள் , அவர்களின் பெற்றோர்கள், பாடசாலையின் அதிபர் மற்றும் வடமேற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி முதிதா ஜயதிலக ஆகியோரிடமும் விசாரணைக் குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

விசாரணை அறிக்கையின்படி, சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் நான்கு மாணவிகளை பள்ளி நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இந்த ஆசிரியர் தான் பணிபுரியும் பாடசாலையில் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவர் இருந்த இடம் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னறிவிப்பின்றி வருகை தராமையினால் சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த ஆசிரியர் தொடர்பான அறிக்கையை பாடசாலை அதிபர் குருநாகல் பிராந்திய கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
Next Post
‘உரித்து’ காணி உரிமையைப் பெறுவதற்கு அவசர தொலைபேசி இலக்கம்!

'உரித்து' காணி உரிமையைப் பெறுவதற்கு அவசர தொலைபேசி இலக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.