வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளைத் தொடர்ந்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னதாக வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய எச்.பி. சிறிவர்தன இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தினேஸ் கருணாநாயக்க வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமையேற்பு நிகழ்வில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







