Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்!

வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் இன்று(26) தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த கடந்த 17 ஆம் திகதி முதல் 10 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை மீளப் பெற்றுக் கொண்ட இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், இன்று(26) மீண்டும் கடற்றொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் 10 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட மீன்பிடி துறைமுகம் இன்று மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்ட பகுதிக்கு நேற்று(25) மாலை வருகை தந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததுள்ளார்.

மேலும், விரைவில் தமிழக முதல்வரை கடற்றொழிலாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து கடற்றொழிலாளர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக மீள பெற்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தை மீள பெற்று இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ள இலங்கை!

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!
செய்திகள்

கற்பிட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்து; தந்தையும் 7 வயது மகனும் உயிரிழப்பு!

August 17, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ் அரசியல் தரப்புகள் மீது தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விமர்சனம்!

August 17, 2026
2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!
செய்திகள்

2 மாதங்களாக தொடரும் கால்நடை வைத்தியர்களின் போராட்டம்; அவசர சேவைக்கு மாற்று ஏற்பாடு!

August 17, 2026
ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
செய்திகள்

ரவீந்திரநாத் கடத்தல் கொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

August 17, 2026
கொழும்பு 09 பகுதியில் 14 மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

கொழும்பு 09 பகுதியில் 14 மாடி குடியிருப்பில் இருந்து விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

August 17, 2026
ஐஸ் போதைப்பொருளுடன்  இளைஞர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 17, 2026
Next Post
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.