Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு தொடருந்து கடவை காப்பாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம் பொலிஸாரின் வாக்குறுதிக்கமைய நிறைவு!

மட்டு தொடருந்து கடவை காப்பாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம் பொலிஸாரின் வாக்குறுதிக்கமைய நிறைவு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தொடருந்து கடவை காப்பாளர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது பொலிஸாரின் வாக்குறுதிக்கமைய நிறைவடைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 24 தொடருந்து கடவைகளில் கடமையாற்றும் கடவை காப்பாளர்கள் தமது சேவையினை நிரந்தரமாக்கக் கோரியும் மாத சம்பளத்தினை உயர்த்தக்கோரியும் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

சுமார் 11 வருடங்களாக நிரந்தர நியமனம் இன்றி நாள் ஒன்றிற்கு 250 ரூபாய் சம்பளத்திற்காக கடமையாற்றிவரும் இவர்களை அரசாங்கம் இவர்களை கடமையில் இருந்து நீக்கிவிட்டு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களை குறித்த கடமையில் சேர்த்துக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கும் இதன் போது தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு தமது நாளாந்த ஊதியமான 250 ரூபாய் ஊடாக தமது வாழ்க்கையினை கொண்டு நடத்த முடியாது எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் (28) மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை தற்போது முன்னெடுப்பதாகவும் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததனைத் தொடர்ந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவி்ட்டுள்ளனர்.

இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் தங்களது போராட்டத்தை இதைவிட பாரிய அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் புகையிரத கடவை காப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 கடவைகளில் 72 தொடருந்து கடவை காப்பாளர்கள் இவ்வாறு நிரந்தர நியமனமின்றி கடமையாற்றி வருவதுடன் இலங்கை முழுவதுமாக 688 புகையிரத கடவைகளில் 2064 தொடருந்து கடவை காப்பாளர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை
உலக செய்திகள்

சீனாவில் ஏஐ செயலிகளுக்கு தற்காலிக தடை

June 13, 2025
பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு
செய்திகள்

பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு அருகில் மனித எலும்புக்கூடு மீட்பு

June 13, 2025
கனடாவில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த வீடு
உலக செய்திகள்

கனடாவில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்த வீடு

June 13, 2025
உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு

June 13, 2025
சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்
செய்திகள்

சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்

June 13, 2025
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு
செய்திகள்

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு

June 13, 2025
Next Post
பாலியல் வன்கொடுமை முறைப்பாடு செய்த பெண் மீது துப்பாக்கி சூடு!

பாலியல் வன்கொடுமை முறைப்பாடு செய்த பெண் மீது துப்பாக்கி சூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.