Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டிருப்பில் ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் ஏட்டிக்குப் போட்டியாக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்!

பட்டிருப்பில் ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் ஏட்டிக்குப் போட்டியாக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் திங்கட்கிழமை இன்று (01)பாடசாலை முடிவுற்ற பின்னர் பாடசாலை முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்திய இடத்திற்கு விரைந்த பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களிடம் ஏன் ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றீர்கள் என வினவினார். அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிலளிக்காது நின்றனர்.

இருந்த போதிலும், பாடசாலையின் தேவையற்ற அறம் இல்லாத தலையீட்டினை உடன் நிறுத்துங்கள், எமது பாடசாலை ஒழுங்கான முறையில் இயங்குவதனை தடுக்காதே, வலயக்கல்வி அலுவலகத்தின் நீதியற்ற ஆசிரியர் இடமாற்றத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம், 300 மாணவர்களைக் கொண்ட பாடசாலையும், 3000 மாணவர்களைக் கொண்ட பாடசாலையும் சமமா? வலயக் கல்விப் பணிப்பாளரே நீதியற்ற நிருவாக தலையீட்டினை பாடசாலையின் மீது திணிக்காதே போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கலைந்து சென்றனர்.

இது இவ்வாறு இருக்க இவ்வாறு பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து, அவர்களுக்கு எதிராக பாட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வலயக்கல்விப் பணிப்பாளர், மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளையான வழிநடத்தலில் குறை கூறும் ஆசிரியர்களே தங்களது சுயநலத்திற்காக செயற்படாது மாணவர் நலன் கருதி செயற்படுங்கள், சிறந்த கல்வி நிருவாகத்தைக் குழப்பும் ஆசிரியர்கள், மாணவர்களது கல்வியை சீர்குலைக்கும் வகையில் நாசகார செயல்களை வெளியிலிருந்து முன்னெடுக்காதீர், போன்ற பல வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு கல்வி அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களும் கலைந்து சென்றனர்.

தொடர்புடையசெய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்
செய்திகள்

துறைமுகத்தில் இலஞ்சம் கேட்ட அதிகாரசபை ஊழியர்கள் இடைநீக்கம்

June 6, 2025
தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு
செய்திகள்

தென் மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்ப்பு

June 6, 2025
மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு
செய்திகள்

மனிதப் புதைகுழியில் இதுவரை ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 18 எலும்புக்கூட்டுகள் மீட்பு

June 6, 2025
கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு
உலக செய்திகள்

கேரளாவில் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக பரபரப்பு

June 6, 2025
மோட்டார் திணைக்களத்தின் மீதான இலஞ்ச வழக்கின் சி.சி.ரி.வி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவிப்பு
செய்திகள்

மோட்டார் திணைக்களத்தின் மீதான இலஞ்ச வழக்கின் சி.சி.ரி.வி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவிப்பு

June 6, 2025
பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டவரை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசா

June 6, 2025
Next Post
மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபர்!

மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.