Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 38வது தேசிய மாணவர் சிப்பாய் படைப்பிரிவின் பதவி உயர்வு விருது வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பில் 38வது தேசிய மாணவர் சிப்பாய் படைப்பிரிவின் பதவி உயர்வு விருது வழங்கும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

38வது தேசிய மாணவ சிப்பாய்கள் படை அணியின் பதவி உயர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இவ்வணியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமில் படை அணியின் இணைப்பு அதிகாரி லெப்டி னன் கேணல் ஜி.டபிள்யு .நிலாந்த தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திர குமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவ சிப்பாய் படைப்பிரிவின் பதவி உயர்வு பெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வைபவரீதியாக வழங்கி வைத்தார்.

இதன்போது மட்டக்களப்பு மெதடிஷ்த மத்திய கல்லூரி தேசிய மாணவர் சிப்பாய் படை அணியினரின் விசேட ஆயுத அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. வலய கல்விப்பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இது பற்றி இங்கு பிரதம அதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா புலேந்திர குமார் கருத்து வெளியிடுகையில், பாடசாலை மாணவர்களை கற்றல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடுத்தாது புறக்கிருத்திய செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தி மாணவர்களை முழுமையான நிலைக்கு உயர்த்துவதற்கு பெற்றோர்கள் முன்வரவேண்டும்.

அந்த வகையில் இந்த சிப்பாய்படை அணியின் பணியில் ஈடுபடுவதற்கு முன் வந்த அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த மாகாணத்தின் பணிப்பாளர் என்ற ரீதியில் மன முவந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் இந்த படை அணியில் பாடசாலை மாணவர்கள் இணைந்து தமது திறமைகளை வளர்த்து எதிர்கால சந்ததியினருக்கு நல்ல தலைமைத்துவத்தை கொண்டு வரும் பிரிவினராக வளர்ச்சி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் .

இதன்போது அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இந்த மாணவர் சிப்பாய் படை அணியினருக்கு இந்த பதவி விருதுகள் ,சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் எதிர்கால சந்ததிக்குகந்த பிரஜைகளை உருவாக்கும் விசேட திட்டத்தின் கீழ் அன்றைய இளைஞர் விவகார அமைச்சர் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலேயே இந்த மாணவர் சிப்பாய் படைஅணி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.