இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை 7 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அம்மாகாணத்தின் ரன்சிகி நகரை மையமாக கொண்டு 11 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்குமுன் தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.








