Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
16 வருட காலமாக நீரின்றி உணவின்றி உயிர்வாழும் பெண்; அதிர்ச்சி அடைந்த வைத்திய நிபுணர்கள்!

16 வருட காலமாக நீரின்றி உணவின்றி உயிர்வாழும் பெண்; அதிர்ச்சி அடைந்த வைத்திய நிபுணர்கள்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் உள்ள உள் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் 16 ஆண்டுகளாக உண்ணவோ துளி நீர் கூட பருகவோ செய்தது இல்லை என கூறி வருகிறார்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்தவர் Muluwork Ambaw. இவருக்கு 10 வயதாக இருக்கும் போது திடீரென்று ஒருநாள் சாப்பிடுவதையும் தண்ணீர் பருகுவதையும் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

கடைசியாக தாம் சாப்பிட்டது சிவப்பு பருப்பில் செய்த உணவு என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். குறித்த தகவல் பத்திரிகைகளில் கசிந்ததும், அமெரிக்க சமூக ஊடக பிரபலம் Drew Binsky அவரை நேரில் சந்தித்து, தாம் கேள்விப்பட்டது உண்மையா என வினவியுள்ளார்.

Muluwork Ambaw என்பவரின் கிராமத்திற்கே நேரிடையாக சென்ற Drew Binsky, அவரது குடியிருப்பைக் கண்டு வியந்துள்ளார். சக கிராம மக்களைவிடவும் பெரிய வீடு அவரது என்பதுடன், உயரமான சுற்று மதில்களுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

அவரது குடியிருப்புக்குள் நுழைந்த Drew Binsky தாம் வேறொரு உலகத்தில் நுழைந்த உணர்வைப் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அவரது குடியிருப்பு ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், கழிவறை ஆப்பிரிக்க பாரம்பரிய முறைப்படி இருந்ததாகவும்,

Muluwork Ambaw பல ஆண்டுகளாக கழிவறையை பயன்படுத்தியதில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரது மகளும் சகோதரியும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை Muluwork Ambaw தமது தோட்டத்தை பராமரிப்பதில் செலவிடுகிறார். அதில் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். விருந்தினர்களுக்காக நிறைய காய்கறிகளை விளைவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

சமையல் தமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் சாப்பிடும் உணர்வு அல்லது பசி என்பது தமக்கு ஏற்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக இது தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் கட்டாயப்படுத்தியும் தம்மால் சாப்பிடவோ, நீர் அருந்தவோ பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், முலுவொர்க்கை எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஆய்வுகள் மற்றும் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், Muluwork Ambaw முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவரது உடலில் உணவு அல்லது நீர் என எதன் கழிவும் காணப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளனர்.

இதனாலையே அவருக்கு சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் சூழல் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, துபாய் மற்றும் கத்தார் நாட்டின் மருத்துவர்களும் முலுவொர்க்கை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அவர்களும் இது விசித்திரம் என்றே பதிவு செய்துள்ளனர். முலுவொர்க் கர்ப்பமாக இருந்த போது வளரும் குழந்தைக்கு ஊட்டமளிக்க குளுக்கோஸ் உட்செலுத்துதல் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயுள்ளது.

தமது இந்த நிலைக்கு காரணம் கடவுளின் செயல் என்றே முலுவொர்க் நம்புகிறார். பலர் இது பித்தலாட்டம் என விமர்சிக்க, வந்து என்னுடன் தங்கிவிட்டு அதன் பிறகு விமர்சியுங்கள் என முலுவொர்க் பதிலளித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்
செய்திகள்

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்

June 7, 2025
ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு
செய்திகள்

ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
Next Post
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து;  பெண்ணொருவர் பலி!

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; பெண்ணொருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.