ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் வெளி மாகாணத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், மற்றைய சகோதரர் கொழும்பில் உள்ள கொள்கலன் முற்றத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1230.png)
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிலிருந்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வருடன் தொடர்புடைய நபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த இரண்டு சகோதரர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இந்த இரு சகோதரர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசேட காவல்துறை குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இரண்டு சகோதரர்களும் சிலாபத்தில் உள்ள உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட காவல்துறை குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1231.png)