கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகாலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் நேற்று (29) பிற்பகல் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1296.png)
உயிரிழந்த பெண் மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை (கவுன்) அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.