Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும்; சஜித் கோரிக்கை!

அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும்; சஜித் கோரிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நிவாரண நிதி எந்தவகையிலும் போதுமானதாக இல்லை. அதனால் நிவாரண நிதியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குறுகிய காலத்துக்குள் இந்த நிவாரண நடவடிக்கைகளை வழங்க எடுத்துவரும் முயற்சிக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அனர்த்தம் காரணமாக அதிகமானவர்களுக்கு உணவு, உடை என அனைத்தும் இல்லாமல் போயிருக்கிறது. அதனால் இவர்களுக்காக முறையான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டும். மாவட்ட செயலகங்களுக்கு மேலதிகமாக 10இலட்சம் ரூபா அனுப்பி இருக்கிறது. ஆனால் அந்த எந்தவகையிலும் போதுமானதாக இல்லை.

சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆகாரம் வழங்க முடியாது. ஒரு நேர சாப்பாடு கூட வழங்க முடியாது.அதனால் குறித்த சுற்று நிருபத்தை உடனடியாக மாற்றயமைக்க வேண்டும். நிவாரணம் வழங்கும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு 400 ரூபா என்ற தொகை எந்தவகையிலும் போதாது.

அத்துடன் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் முற்றாக மாற்றப்பட வேண்டும். முறையான அனர்த்த முகாமைத்துவ நிவாரண வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
ஜெர்மனியில் அவசர நிலை அறிவிப்பு; வெளியேற்றப்படும் மக்கள்!

ஜெர்மனியில் அவசர நிலை அறிவிப்பு; வெளியேற்றப்படும் மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.