புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் பல பிரச்சனைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (11) பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி மற்றும் மயக்கம் போன்ற நோயால் வைத்தியசாலையில் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதித்தபோது மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் வைத்தியசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இன்று காலை உடையார் கட்டு மத்திய கல்லூரிக்கு கல்வி கற்க சென்ற மாணவியொருவர் உடல்நலக் குறைவால் பாடசாலையிலிருந்து காலை பெற்றோரிடம் பாடசாலை நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக பாடசாலை மாணவி மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை காணப்பட்டதுடன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்து கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் தேவைப்பட்டதன் காரணத்தால் மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
மற்ற நோயாளர்களை ஏற்றி செல்வதற்காக மணிக்கணக்கில் நோயாளர் காவு வண்டி காத்திருந்து கொண்டிருந்த நேரம், சுமார் 3 மணி நேரத்தின் பின் இது தொடர்பாக வைத்திய அதிகாரியுடன் குறித்த மாணவியின் தந்தை கேட்டபோது, எல்லா நோயாளர்களுடன் தான் கொண்டு செல்ல வேண்டும், அப்படியாயின் உங்களது சொந்த செலவில் நோயாளர்காவு வண்டி எடுத்து கொண்டு செல்லவும் என முரண்பாடாக பேசியுள்ளார்.
இதன் பின் மாணவியும் தந்தை தனது சொந்த விருப்பின் பெயரில் வைத்தியசாலையிலிருந்து மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.