Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்!

மட்டு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்கமும் அரச அதிகாரிகளும் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று(16) மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன், செயலாளர் கு.அனுசன், பொருளாளர் ரி.கிருஷாந்த், சங்கத்தின் அமைப்பாளர் மொஹமட் அஷீம் ஆகியோர் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு நடைபெற்றது.

நாங்கள் எமது வேலைவாய்ப்பு உரிமையினையே எதிர்பார்க்கின்றோம்.அதனை நாங்கள் போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைமைக்கு எங்களை தள்ளவேண்டாம்.இன்று வேலையற்ற நிலையில் நாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்துவிட்டு வீடுகளில் இருப்பதனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டதாரிகள் தொழில்வாய்ப்புகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல், கொரனா உட்பட பல்வேறு காரணங்களினால் தமது பட்டக்கல்வியை காலம் தாழ்த்து பூர்த்திசெய்த மாணவர்களும் இன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எங்களது நிலைமைகளை கருத்தில்கொண்டு எமக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும், அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும்.போராட்டங்கள் ஊடாகத்தான் எங்கள் கோரிக்கையினை நிறைவேற்ற நாங்கள் விரும்பவில்லை.

எங்களை அந்த நிலைமைக்குள் தள்ளிவிடாமல் விரைவாக எமக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். எதிர்காலத்தில் எமக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கே எமது ஆதரவுகள் இருக்கும். இன்றைய அரசு எமக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துமானால் அவர்களுக்கான ஆதரவு இருக்கும்.

பெண்கள் பெரும் கஸ்டத்திற்கு மத்தியிலேயே தமது தமது பட்டக்கல்வியை பூர்த்திசெய்த நிலையிலும் வேலைவாய்ப்புகள் பெறமுடியாத நிலையில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் தனியார் வேலைவாய்ப்பினை தேடிச்சென்றால் பட்டபடிப்பனை பூர்த்திசெய்த காரணத்தியால் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு முன்வராத நிலையே காணப்படுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

August 16, 2026
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!
செய்திகள்

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!

August 16, 2026
சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
செய்திகள்

சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

August 16, 2026
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

August 16, 2026
உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!
செய்திகள்

உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

August 16, 2026
Next Post
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.