Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு!

மட்டு திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாமற்றும் இலங்கையில் உள்ள 21 கங்கைகளின் புனித தீர்த்தங்கள் மட்டு கல்லடி மாரியமன் ஆலையத்தில் இருந்து திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமர் சந்நிதான கயிலைப்புனிதர், முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் 20 சுவாமிகள் நேற்று திங்கட்கிழமை (17) மாலை வேளையில் திருச்செந்தூர் ஆலையத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

எதிர்வரும் 20 ம் திகதி மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள பிரபலமான பல ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து இந்தியாவின் கங்கை முதலான 12 புனித தீர்தங்களும் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம் பாலாவி முதலான 9 புனித தீர்தங்களும் கொண்டு திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளது.

இந்த புனித தீர்தங்களுடன் மதுரை அருள்மிகு ஸ்ரீறி மீனாட்சி அம்மன் ஆலைய தெய்வ நெறிகளாக தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமி, திருவண்ணாமலை சடைச்சசாமி ஆச்சிரம 5 வது மடாதிபதி தவத்திரு திருப்பாத சுவாமிகள், திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமய கோளறிநாத 38 வது ஆதீன சன்னிதான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பீட புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், இந்தியா அகில பாரதீய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார்.

திருவண்ணாமலை சடைச்சசாமிகள், ஆச்சிரம தவத்திரு நிர்மாலானந்தர் சுவாமிகள் உட்பட 20 பேர் கொண்ட சுவாமிகள் இந்தியாவில் இருந்து எடுத்து வந்த புனித தீர்தங்கள் மற்றும் இலங்கையில் கங்கை முதலான புனித தீர்தங்கள் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து இந்தியா இலங்கை ஆதின மடாதிபதிகள் சந்நியாசிகள் தலைமையில் கலசங்களிலுள்ள புனித தீர்தங்கள் மற்றும் 108 முளைப்பாரிகள் பெண்களால் சிறப்பு பிராத்தனையுடன் அங்கிருந்து கல்லடி பிரதான வீதியை வந்தடைந்து பின்னர் சரவணா வீதியை சென்று நாவலடி வீதி ஊடாக நாதேஸ்வர வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக திருச்செந்தூர் முருகன் ஆலையத்துக்கு அழைத்து கொண்டு செல்லப்பட்டது

அதனை தொடர்ந்து ஆதின சுவாமிகளை செம்கம்பள வரவேற்பளித்து கொண்டுவரப்பட்ட தீர்தங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டதுடன் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆதின மடாதிபதி சுவாமிகளிடம் பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.

இன்று புதன்கிழமை எண்ணைய்காப்பு சாத்தலை தொடர்ந்து 20 ம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்தியா இலங்கை பல ஆதின மடாதிபதிகள் முதல் முதல் ஒன்றிணைந்து திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
பீடி கொடுக்க மறுத்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்!

பீடி கொடுக்க மறுத்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.