வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 06 இந்திய பிரஜைகளும், வரியில்லாமல் சிகரெட் கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்கா, பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கட்டுநாயக்க காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த (11) ஆம் திகதி பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.