Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறினார் இராமநாதன் அர்ச்சுனா!

சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறினார் இராமநாதன் அர்ச்சுனா!

2 years ago
in செய்திகள்

சாகவகச்சேரி வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற வைத்தியர் அர்ச்சுனா நீண்ட வாத விவாதங்களின் பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு, பதில் வைத்திய அத்தியட்சகராக முன்னர் இருந்த இராமநாதன் அர்ச்சுனா வருகைதந்தமையால் குழப்பமான நிலை ஏற்பட்டது.

வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் வைத்திய அத்தியட்சகர் என இராமநாதன் அர்ச்சுனாவும் கோபால மூர்த்தி ரஜீவ்வும் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டநிலையில் பொலிஸார் தலையிட்டு சுமூகமான நிலையை ஏற்படுத்த முயன்றனர்.

இதனையடுத்து சில மணிநேரங்கள் வைத்தியசாலை அலுவலக அறையில் சில கடமைகளில் ஈடுபட்டு விட்டு இராமநாதன் அர்ச்சுனா வெளியேறிச் சென்றார்.

இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவ் தொடர்ந்தும் கடமையில் உள்ளார்.

தனக்கு உத்தியோகபூர்வமாக மத்திய சுகாதார அமைச்சில் இருந்து என்னை நீக்குவதற்கான கடிதம் வராத நிலையில் நானே சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் என தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா, எனது விடுமுறை நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் கடமைக்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

நாளை சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக்குழு யாழ்ப்பாணத்துக்கு வரும்போது இது தொடர்பில் முடிவு எட்டப்பட்டும் எனவும் இராமநாதன் அர்ச்சுனா நம்பிக்கை வெளியிட்டார்.

வெளியேறிச் சென்ற வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை குழுமிய பொதுமக்கள் அவரை தோளில் தாங்கிச் சென்றனர். இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்பட்டதுடன் வைத்தியசாலை செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்றது.

இதேவேளை வைத்தியசாலை முன்பாக குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!
செய்திகள்

“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!

August 21, 2026
ரூ.20,000 இலஞ்சக் குற்றச்சாட்டு; இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்
செய்திகள்

ரூ.20,000 இலஞ்சக் குற்றச்சாட்டு; இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

August 21, 2026
மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!
செய்திகள்

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!

August 21, 2026
ஆலயத்தில் தாக்குதல்; மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஆலயத்தில் தாக்குதல்; மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு
செய்திகள்

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு

August 21, 2026
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!
செய்திகள்

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!

August 21, 2026
Next Post
தெதுரு ஓயாவில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தெதுரு ஓயாவில் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.