Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை சிறையிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விடுதலை!

இலங்கை சிறையிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விடுதலை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் 7 நாட்களில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான இலங்கையின் ஓய்வுபெற்ற உயர்ஸ்தானிகர் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன, பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் மொஹ்சின் நக்வியை இன்று (19) இஸ்லாமாபாத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை சிறையில் உள்ள பாகிஸ்தான் பிரஜைகளை விடுவிப்பது மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்படி பல ஆண்டுகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகளை ஏழு நாட்களில் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை முடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதேவேளை பாகிஸ்தான் கைதிகளின் விடுதலைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்ததுடன் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் முடிக்கப்பட்டு வருவதாக இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

அத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் காலப்போக்கில் வலுவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரஸ்பர உறவுகளை மேலும் மேம்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது காலத்தின் தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பாகிஸ்தானுடனான உறவுகளுக்கு இலங்கை அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்
செய்திகள்

சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்

August 21, 2026
பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!
செய்திகள்

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

August 21, 2026
பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

August 21, 2026
மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

August 21, 2026
நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

August 21, 2026
கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!
செய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

August 21, 2026
Next Post
அதிக இலாபம் பெறும் முட்டை உற்பத்தியாளர்கள்!

அதிக இலாபம் பெறும் முட்டை உற்பத்தியாளர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.