Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்!

10 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் – 2024 பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்குபற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என்று கூறி ஒரு தரப்பினர் அந்நாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் நகருக்கு செல்ல முடியாமல் அவதியுற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பின்னர், பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததும், ஏராளமான மக்கள் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நடைபெறும் சீன் நதிக்கரையில் ஒன்று கூட ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், பாரிஸ் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் 45,000 பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றினர். இதில் முதல் நாடாக க்ரீஸ் இடம்பெற்றுள்ளது.

இந்த அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றுள்ளனர்.

அணிவகுப்பைத் தொடர்ந்து தொடக்க விழா நிறைவு நிகழ்ச்சிகள் டொரக்கடேரோ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரபல அமெரிக்க பாப் பாடகி லேடி காகா மேடையில் தோன்றி பாடல் பாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகளுடன் கூடிய கண்கவர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வருகை தந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்றும் வீரர்கள் படகுகளில் அணிவகுத்து சென்ற போது இலங்கை வீரர்களும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை வீரர்கள் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
காணொளிகள்

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

May 12, 2025
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது
செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது

May 12, 2025
வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது
செய்திகள்

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

May 12, 2025
இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி; அஜித் ராஜபக்‌ச
செய்திகள்

இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி; அஜித் ராஜபக்‌ச

May 12, 2025
முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்

May 12, 2025
இன்றும் நடைபெற்ற தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்
செய்திகள்

இன்றும் நடைபெற்ற தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

May 12, 2025
Next Post
வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.