பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை வீசி வீதியில் அமைந்துள்ள நூல் கலரிடும் தொழிற்சாலை ஒன்றில் ஐஸ் போதைப் பொருளுடன் நால்வர் பெரியநீலாவணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்கள் இரவு நேரத்தில் தொழிற்சாலையில் யாருமில்லாத போது நீண்ட நாட்களாக ஐஸ் போதை பொருளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பை அடுத்து குறித்த 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 30, 20 வயதுடைய இருவரும் மற்றும் 17 வயதுடைய இரண்டு பேர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி கைதுசெய்யப்பட்ட நபர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.








