Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ள போராட்டம்; அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ள போராட்டம்; அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!

9 months ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரித்தானியாவில், எதற்கோ எப்படியோ துவங்கிய போராட்டம் ஒன்று, தற்போது புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ளதால், வெளிநாட்டவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இங்கிலாந்திலுள்ள Southport என்னுமிடத்தில், Axel Muganwa Rudakubana (17) என்னும் இளைஞன், குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கினான்.

அந்த தாக்குதலில், பல பிள்ளைகள் காயமடைந்தார்கள், மூன்று குழந்தைகள் உயிரிழந்தார்கள். அதைத் தொடர்ந்து, தாக்குதல்தாரி ஒரு புகலிடக்கோரிக்கையாளர் என்றும், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் வேகமாகப் பரவத் துவங்கின.

அதைத் தொடர்ந்து, புகலிடக்கோரிக்கையாளர்கள் மையங்கள் மீது தாக்குதல்கள் துவங்கியுள்ளன. ஆசியர்களைக் குறிவைத்து தாக்கும் சம்பவங்களும் துவங்கியுள்ளன.

Middlesbrough பகுதியில், வாகனங்களில் செல்வோரை வழிமறிக்கும் கூட்டம் ஒன்று, அவர்கள் வெள்ளையர்கள் என்றால் மட்டுமே அவர்களை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும் ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

முதலில், Rotherham என்னுமிடத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஒரு ஹொட்டல் மீது புலம்பெயர்தல் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

பின்னர், Tamworth என்னுமிடத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹொட்டல் ஒன்றுக்கு தீவைத்துள்ளார்கள் போராட்டக்காரர்கள்.

#Middlesbrough asking if the drivers are white to let them through..if not they're going nowhere.

Genuinely scared for my town pic.twitter.com/48xfqefse5

— ✨️ Kittie Hill ✨️ (@KittieHill) August 4, 2024

இதனால், புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டவர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

Yorkshireஐச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான Azeem Rafiq, தங்கள் குடும்பம் அச்சத்தில் உறைந்திருப்பதாகவும், வெளியில் நிலவும் வன்முறை காரணமாக, இரவில் தூங்கக்கூட பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில், எதையோ வலுக்கட்டாயமாக காரணம் காட்டி, பிரித்தானியாவின் அமைதியைக் குலைத்துவிட்டதாக சிலர் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankaபிரித்தானியா

தொடர்புடையசெய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
செய்திகள்

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
செய்திகள்

நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை
செய்திகள்

மின்சார சபை தலைவர் பதவி விலகவில்லை என அமைச்சு மறுப்பறிக்கை

May 12, 2025
Next Post
விஹாரகொட பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு!

விஹாரகொட பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.